கல்வி

பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், ‘லாகரிதம்’ குளறுபடி : மாணவர்கள் தவிப்பு

கோவை : பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், தனியார் பள்ளி நிர்வாகம் அளித்த தவறான, “லாகரிதம்’ அட்டவணை காரணமாக, கோவை தனியார் பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தவறான விடை எழுதி மதிப்பெண்களை இழந்தனர்.
விரிவு…

கல்வி நிறுவனங்களுக்கு கடன் வழங்க தேசிய கல்வி நிதி கழகம் துவக்க திட்டம்

tblarasiyalnews_22850763798புதுடில்லி : “”உயர் கல்வி நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக தேசிய கல்வி நிதி கழகத்தை அமைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,” என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
விரிவு…

200 நடுநிலைப் பள்ளிகள் நிலை உயரும்

கோவை,​​ மார்ச் 4: அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில்,​​ 200 நடுநிலைப் பள்ளிகள்,​​ உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட உள்ளன என்று,​​ பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் எஸ்.கார்மேகம் தெரிவித்தார்.
விரிவு…

சமச்சீர் கல்விக்கு விலை குறைந்த ‘கலர்புல்’ நூல்கள்: தமிழக தொடக்க கல்வி இயக்குனர் தகவல்

tblgeneralnews_80179995299கோவை:”வரும் கல்வியாண்டு தமிழகம் முழுவதும் உள்ள முதல் வகுப்பு குழந்தைகளுக்கு, கலர் கலரான புத்தகங்கள் குறைந்த விலையில் வழங்கப்படும்’ என, தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் தேவராஜன் கூறினார்.

விரிவு…

அருந்ததியின மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பு: வலசை ரவிச்சந்திரன்

job_openingsதமிழக முதல்வர் அறிவித்த உள் இடஒதுக்கீட்டால் அருந்ததியர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அருந்ததியர் மக்கள் கட்சித் தலைவர் வலசை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
விரிவு…

அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் கல்வி: ஒப்பந்தம் கையெழுத்து

புதுச்சேரி, பிப். 25: அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் கல்வி முறையை அமல் செய்ய வியாழக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது.
விரிவு…

97,000 காலிப் பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்வு

திருச்சி, பிப். 24: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாவட்ட திமுக சார்பில் வெள்ளிக்கிழமை (பிப். 26) தொடங்கவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் 97,000 காலிப் பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
விரிவு…

இன்ஜி., கல்லூரி துவங்க 100 விண்ணப்பம்: தாங்குமா

சென்னை: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளை துவக்க இந்தாண்டு மட்டும் 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
விரிவு…

இந்திய கல்விக் கொள்கைக்கு அமெரிக்காவைப் பார்த்து காப்பியடிக்கக் கூடாது: பொன்முடி

ponmudiவேலூர்,​​ பிப்.​ 22: இந்திய கல்விக் கொள்கைக்கு அமெரிக்காவையோ,​​ பிற நாடுகளையோ பார்த்துக் காப்பியடிக்கக் கூடாது;​ அது,​​ நமது தேவைக்கு ஏற்றாற்போல இருக்க வேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார்.
விரிவு…

கல்வித்துறையில் புதிய அணுகுமுறைகள்: கபில் சிபலுக்கு அமெரிக்கா பாராட்டு

வாஷிங்டன், பிப்.20: இந்தியாவில் கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபலின் சீரிய நடவடிக்கைகளே காரணம் என்று அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளாக் கூறியதாவது:

÷இந்திய கல்வித் துறையில் அயல்நாடுகளின் பங்களிப்பை அதிகரிக்கும் சட்ட மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என கபில் சிபல் உறுதி அளித்துள்ளார். இதன் மூலம் இந்திய கல்வி துறையில் குறிப்பாக உயர் கல்வி துறையில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும்.

÷இந்தியாவில் ஏறத்தாழ 22 கோடி பேர் மேல்நிலை வகுப்பு படிக்கின்றனர். ஆனால் இவர்களில் 1 கோடி பேர் மட்டுமே கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடிகிறது. இதில் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அமெரிக்க கல்வி நிறுனங்களில் படிக்கின்றனர்.

இந்த சட்டம் அமல்படுத்தப்படுவதின் மூலம் அமெரிக்க கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் இந்திய மாணவர்களுக்கு தங்களது பங்களிப்பினை அளிக்க முடியும்.

பொதுவான ஆராய்ச்சி மற்றும் கலை பிரிவுகள் மட்டுமின்றி kapilசமூகம், இதர கல்வி பிரிவுகள், தொலைதூர கல்வி உள்பட அனைத்து கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் பங்களிப்பினை அமெரிக்க கல்வி நிறுவனங்கள் அளிக்கும் என பிளாக் தெரிவித்தார்.
விரிவு…